தமிழகத்தில் 3 வழித்தடங்களில் மித அதிவேக ரயில் சேவைகள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்வதற்கான டெண்டரை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் 3 வழித்தடங்களில் மித அதிவேக ரயில் மண்டலப் போக்குவரத்து (ஆர்ஆர்டிஎஸ்) அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மூலம் ஆராயப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்கான டெண்டரை சென்னை மெட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், ஏப்ரல் 2 முதல் மே 2 பிற்பகல் 3 மணிக்கு முன்னதாக டெண்டர் கோரும் நிறுவனங்கள் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை - செங்கல்பட்டு - விழுப்புரம் வழியாக 167 கி.மீ., சென்னை - காஞ்சிபுரம் - வேலூர் வழியாக 140 கி.மீ., கோவை - திருப்பூர் - சேலம் வழியாக 185 கி.மீ. தொலைவுக்கு மித அதிவேக ரயில் சேவை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்படவுள்ளது.
இந்த ஆய்வின் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.