முகப்பு
தமிழ்நாடு

கோடையில் 22,000 மெகாவாட் மின் தேவை: அமைச்சர் செந்தில் பாலாஜி

கூடுதல் மின்சாரத் தேவை குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி.

Updated On : 26 மார்ச் 2025, 6:14 pm IST
அமைச்சர் செந்தில் பாலாஜி
பகிர்:

கோடைக்காலத்தில் 22,000 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் என்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னையில் மின்சாரத் துறை தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவர் பேசுகையில்,

”கோடைக் காலத்தில் 22,000 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் நிலை ஏற்படலாம். எந்தத் தடையும் இல்லாமல் சீரான மின்விநியோகம் வழங்குவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கடந்த 4 ஆண்டுகளில் 78,000 மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன. மின்சாரத் துறையில் காலியாகவுள்ள அவசியமான பணியிடங்கள் விரைவில் நிரப்படும்.

2030-க்குள் மின் உற்பத்தியை அதிகரிக்கth திட்டமிடப்பட்டுள்ளது. ஏப்ரல், மே மாதத்திற்கு கூடுதலாக தேவைப்படும் மின்சாரத்திற்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது” என்றார்.

இதையும் படிக்க: 'திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்' - சேகர்பாபு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments