புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து: பேரவையில் 16-வது முறையாக தீர்மானம் நிறைவேற்றம்
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தர வலியுறுத்தி, பேரவையில் 16-வது முறையாக தீர்மானம் நிறைவேற்றம்
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி, 16-வது முறையாக சட்டபேரவையில் அரசு கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து பேரவையை காலவரையின்றி ஒத்தி வைத்தார் அவைத் தலைவர் செல்வம்.
புதுச்சேரியில் கடந்த 10-ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் உரையுடன் துவங்கியது. 12-ஆம் தேதி பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார். தொடர்ந்து மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நிறைவு பெற்ற நிலையில் இன்று இறுதி நாளான தனிநபர் தீர்மானம் எடுத்துக் கொள்ளப்பட்டது.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் ஏற்கனவே 15 முறை ஒருமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றி உள்ள நிலையில் மீண்டும் இன்று காங்கிரஸ் மற்றும் திமுக உறுப்பினர்கள் கொண்டு வந்தனர்.
Advertisement
Advertisement
இதன் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர்(திமுக) சிவா, இப்போதைக்கு மாநில அந்தஸ்து கிடைக்காது என்றும், மாநில அந்தஸ்து பெற ஆட்சியை கலைத்து விட்டு வாருங்கள். போராடுவோம் என முதல்வர் ரங்கசாமிக்கு அழைப்பு விடுத்தார்.
இதனையடுத்து தனி நபர் தீர்மானத்தை அரசு தீர்மானமாக முதலமைச்சர் ரங்கசாமி கொண்டு வந்தார். இதையடுத்து அவைத் தலைவர் செல்வம், மாநில அந்தஸ்து கோரும் தீர்மானம் சட்டப்பேரவையில் ஏகமனதாக அரசு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.