துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கோப்புப் படம்
தமிழ்நாடு

ரூல்ஸ் போட்டால் ரூ போட்டு அலறச் செய்வார் முதல்வர்: உதயநிதி ஸ்டாலின்

ரூல்ஸ் போட்டால் ரூ போட்டு அலறச் செய்வார் நமது முதல்வர் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

DIN

சென்னை: பாசிஸ்டுகள் பல ரூல்ஸ் போட்டு நம்மை அடக்க நினைத்தாலும், ஒரு ரூ போட்டு அவர்களை அலறச் செய்வார் நமது முதல்வர் மு.க. ஸ்டாலின் என்று பேரவையில் உரையாற்றிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

பேரவையில் இன்று உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், சென்னை கார் பந்தயத்தை விமர்சித்தவர்களே பாராட்டும்படி நடத்திக் காட்டியிருக்கிறோம். எந்த சவாலான போட்டியையும் எளிதில் நடத்தும் ஆற்றல் நமக்கு உண்டு என்பதற்குச் சான்று இது. ராதாபுரத்தில் சர்வதேச மைதானம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என்றும் அவைத் தலைவர் அப்பாவு கோரிக்கையை ஏற்று முதல்வர் ஏற்கனவே அறிவித்த திட்டம் இது என்றும் கூறினார்.

மேலும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குறித்துப் பேசிய உதயநிதி ஸ்டாலின், கடந்த ஆண்டு எனது காரில் ஏற முயன்றார் இபிஎஸ், அப்போது எனது பாதை மாறாது என்று கூறினார். ஆனால் தற்போது மூன்று கார்கள் மாறி தில்லிக்கு பயணப்பட்டுள்ளார். ஒரு முறை கூட பேரவையில் என் பதிலின்போது இபிஎஸ் இல்லை. அவசரமாக தில்லி சென்றுவிட்டார்.

பாசிஸ்டுகள் பல ரூல்ஸ் போட்டு நம்மை அடக்க நினைத்தாலும் ரூ போட்டு அலறச் செய்வார் நமது முதல்வர்.

மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்திருக்கும் முதல்வருக்கு நன்றி கூறினார் உதயநிதி ஸ்டாலின்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

அரிவாளை வைத்து மிரட்டும் வகையில் ரீல்ஸ் வெளியிட்டவர் கைது!

கோவில்பட்டி பள்ளியில் இருபெரும் விழா

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: பாளை சிறை கைதியிடம் டிஐஜி விசாரணை

குவஹாட்டியில் ஏழுமலையான் கோயில்: அஸ்ஸாம் முதல்வா் திருமலையில் ஆலோசனை

SCROLL FOR NEXT