புதுக்கோட்டையில் ரமலான் சிறப்புத் தொழுகை
ரமலான் பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை ஈத்கா திடலில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் திங்கள்கிழமை காலை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.
ரமலான் பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை ஈத்கா திடலில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் திங்கள்கிழமை காலை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.
இஸ்லாமியர்களின் முக்கியப் பண்டிகையான ரமலான் எனப்படும் ஈகைப் பெருநாள் விழா நிகழாண்டில் திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி, புதுக்கோட்டை பேருந்து நிலையம் பின்புறமுள்ள ஈத்கா திடலில் காலை 7.30 மணிக்கு நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் கூடி, சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.
Advertisement
Advertisement
புத்தாடைகள் அணிந்து வந்த அவர்கள், வீடுகளில் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இனிப்புகளையும் உணவுகளையும் வழங்கி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
திருவருள் பேரவையினர்...
புதுக்கோட்டை மாவட்டத்தின் அனைத்து சமயக் கூட்டமைப்பான திருவருள் பேரவை சார்பில், இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
பேரவையின் தலைவர் டாக்டர் கே.எச். சலீம், செயலாளர் வழக்குரைஞர் ஏ. சந்திரசேகரன், பொருளாளர் எஸ். மத்தியாஸ், துணைச் செயலர் பேரா. சா. விஸ்வநாதன் உள்ளிட்டோர் ஈத்கா திடலுக்குச் சென்று தொழுகை முடித்த இஸ்லாமியர்களுக்கு பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.