கோப்புப் படம் DNS
தமிழ்நாடு

ஒரே நாளில் ரூ. 272 கோடி வருவாய்! - பத்திரப் பதிவுத் துறை தகவல்

ஒரேநாளில் ரூ. 272 கோடி வருவாய் ஈட்டிய பத்திரப் பதிவுத் துறை...

DIN

பத்திரப் பதிவில் நேற்று (ஏப்.30) ஒரேநாளில் ரூ. 272 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுபமுகூர்த்த முக்கிய நாள்களில் தமிழக பத்திரப் பதிவுத் துறை சார்பில் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் அட்சய திருதியை நாளான நேற்று(ஏப்.30) அனைத்து சார்பதிவாளர் அலுவலங்களிளும் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்பட்ட நிலையில் நேற்று மட்டும் 27,440 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, இதுவரை இல்லாத அளவாக நேற்று (ஏப். 30) ஒரே நாளில் ரூ. 272.87 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக பதிவுத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த பிப்ரவரி 10-ல் ரூ. 237 கோடி வருவாய் ஈட்டியது அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் நீட்டிப்பு: தேர்தல் ஆணையம்

தீபாவளிக்கு 20,378 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

பலே ரோஜா... மாளவிகா மோகனன்!

பிக் பாஸ் போட்டியாளர் எஃப்.ஜே.வுக்கும் ஹிப்ஹாப் ஆதிக்கும் என்ன தொடர்பு?

'இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது' - முதல்வர் மு.க. ஸ்டாலின்

SCROLL FOR NEXT