10-ம் வகுப்பு முடிவுகள்: தூத்துக்குடி 3-வது இடம்! 96.76% தேர்ச்சி!
10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் தூத்துக்குடி மாவட்ட தேர்ச்சி விகிதம் பற்றி...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில், 10 ஆம் வகுப்பு தேர்வில் 96.76 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதையடுத்து இந்த மாவட்டம் 3 ஆவது இடம் பெற்றுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 308 நடுநிலைப் பள்ளிகளில், 10,347 மாணவர்கள், 11,112 மாணவிகள் என மொத்தம் 21,459 பேர் தேர்வெழுதினர். அவர்களில் 9,867 மாணவர்கள், 10,897 மாணவிகள் என மொத்தம் 20,764 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தத்தில் நிகழாண்டு 96.76 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதையடுத்து தேர்ச்சி விகிதத்தில் தூத்துக்குடி மாவட்டம் 3 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு 94.39 சதவீதம் தேர்ச்சி பெற்று 9 ஆவது இடத்திலிருந்த தூத்துக்குடி மாவட்டம் நிகழாண்டு 96.76 சதவீதம் தேர்ச்சி பெற்று 3 ஆம் இடத்துக்கு முன்னேறி உள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேஷ் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.