எஸ்ஐஆர்-க்கு எதிராக திமுக கண்டன ஆர்ப்பாட்டம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக நவ. 11-ல் தமிழகம் முழுவதும் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்த அறிவிப்பில், ``கேள்விக்குறியாகியுள்ள பல கோடி மக்களின் வாக்குரிமை நம் மக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்க, கழகத்தினர் கண்ணும் கருத்துமாக இருந்து மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்தும், வரும் நவம்பர் 11-ஆம் நாள் அனைத்து மாவட்டங்களின் தலைநகரங்களிலும் எஸ்ஐஆர்-க்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டங்களைக் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து வெற்றிகரமாக நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் எனும் சதி வலையில் சிக்காமல் நம் மக்களைக் காக்க வேண்டிய பொறுப்பு கழக நிர்வாகிகள் ஒவ்வொருவருக்கும் உள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பை பலப்படுத்துவோம்’’ என்று தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: உழைப்பவர்களை எவராலும் வீழ்த்த முடியாது- செங்கோட்டையன்
CM Stalin announces protest against SIR
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.