முகப்பு
தமிழ்நாடு

நவ. 24-ல் ஓபிஎஸ் தலைமையில் உரிமை மீட்புக் குழு ஆலோசனை!

ஓபிஎஸ் தலைமைமையில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் தேதி அறிவிப்பு குறித்து...

Updated On : 12 நவம்பர் 2025, 6:54 pm IST
ஓ.பன்னீர் செல்வம் - கோப்புப் படம்
பகிர்:

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நவ. 24ஆம் தேதி நடைபெறும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

Advertisement

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் தலைமைக் நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ச. ராமச்சந்திரன் தலைமையில், சென்னை வேப்பேரி, ரிதர்ட்டன் சாலையில் அமைந்துள்ள ஒய்.எம்.சி.ஏ. திருமண மண்டபத்தில் நவ. 24 திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெறும். அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | மீனவர்கள் கைது; மாலியில் தமிழர்கள் கடத்தல்: உடனடி நடவடிக்கை தேவை! - இபிஎஸ்

summary

Rights Recovery Committee meeting led by OPS on Nov. 24

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.