முகப்பு
தமிழ்நாடு

அரசுப் பேருந்துகள், டிராக்டர் மோதி விபத்து: 11 பேர் படுகாயம்!

இரு அரசுப் பேருந்து, டிராக்டர் மோதி விபத்து தொடர்பாக...

Updated On : 12 நவம்பர், 2025 at 8:27 AM
பகிர்:

திருவிடைமருதூர் அருகே 2 அரசுப் பேருந்துகள் மற்றும் டிராக்டர் மோதிய விபத்தில் 11 பயணிகள் படுகாயம் அடைந்தனர்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே கோவிந்தபுரம் பகுதியில், மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த அரசுப் பேருந்து முன்னாள் சென்ற டிராக்டரை முந்த முயன்ற போது, டிராக்டரின் சக்கரத்தில் பேருந்து மோதியது.

மோதிய வேகத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, ஆடுதுறை நோக்கி வந்த அரசுப் பேருந்தின் மீது நேருக்கு நேரு மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்து கண்ணாடிகள் நொறுங்கியது. இதில் இரண்டு பேருந்துகளிலும் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.‌

இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருவிடைமருதூர் மற்றும் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து திருவிடைமருதூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் கும்பகோணம் - மயிலாடுதுறை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

summary

Two government buses collide with a tractor in an accident

முழு கட்டுரையைப் படிக்க →