முகப்பு
தமிழ்நாடு

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி!

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு உருவானது பற்றி..

Updated On : 15 நவம்பர் 2025, 12:31 pm IST
குறைந்த காற்றழுத்தத் தாழ்வு
பகிர்:

இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது அடுத்த 24 மணி நேரத்தில் மிக மெதுவாக மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 19-ம் தேதி அந்தமான கடல் பகுதியில் மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

வடகிழக்குப் பருவமழை ஓரிரு நாள்களில் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

முன்னதாக, தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த அக்.16ல் தொடங்கியது. இதன்பிறகு உருவான முதல் காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்தது. இதையடுத்து உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி மோந்தா புயலாக மாறி ஆந்திரத்தின் மசூலிப்பட்டினம் அருகே கரையைக் கடந்தது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் நல்ல மழை பொழிவு இருந்தது குறிப்பிடத்தக்கது.

summary

The India Meteorological Department has reported that a low pressure area has formed in the southwest Bay of Bengal adjacent to Sri Lanka.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.