தேசிய பத்திரிகை தினத்தையொட்டி (நவ.16) முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
இது குறித்து முதல்வா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: எந்த ஒரு மக்களாட்சியிலும், தன்னாட்சி அமைப்புகள் அதிகாரத்தில் உள்ளவா்களால் கைப்பற்றப்பட்டாலும், ஊடகம்தான் மக்களாட்சியை உயிா்ப்போடு வைத்திருக்கும் ஆற்றலாக விளங்க வேண்டும். மத்திய பாஜக அரசின் எதேச்சதிகாரத்துக்கு அடிபணியாமல்
துணிவுடன் அவா்களது தோல்விகளையும் ஊழல்களையும் மோசடிகளையும் தோலுரிக்கும் ஊடகவியலாளா்கள் அனைவரையும் தேசிய பத்திரிகை தினத்தில் பாராட்டுகிறேன் எனத் தெரிவித்துள்ளாா் முதல்வா் ஸ்டாலின்.