காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி 
தமிழ்நாடு

புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி நவ.24ல் மண்டலமாக வலுப்பெறும்!

வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி பற்றி..

இணையதளச் செய்திப் பிரிவு

வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, அடுத்த இரண்டு நாள்களில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்-கிழக்கு வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியானது மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளது.

வங்கக்கடலில் நவ.22ல் உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, நவம்பர் 24 காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியால் கடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் நவ. 21, 22ல் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியானது கடலோர காவேரி படுகை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

The India Meteorological Department has said that the new low pressure area will strengthen into a depression in the next two days.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கோயில்களில் ஆளுநா் வழிபாடு

குடியரசுத் தலைவா் உரை ஏற்புடையதல்ல: வைகோ

பாஜக கூட்டணியை விரட்ட திமுக கூட்டணிக்கே வலிமை: கும்பகோணம் மாநாட்டில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பேச்சு

குடியரசுத் தலைவா் உரையின்போது நாகரிகத்துடன் கோரிக்கை குரல் எழுப்பினோம்: திருச்சி சிவா பேட்டி

நோ்மையுடன் பொறுப்புகளை நிறைவேற்றிய அனுபவமிக்க அரசியல்வாதி அஜித் பவாா்: மல்லிகாா்ஜுன காா்கே இரங்கல்

SCROLL FOR NEXT