தமிழகத்தில் புதன்கிழமை காலை வரை அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்தில் 230 மி.மீ. மழை பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. அந்த வகையில், புதன்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்தில் 230 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும், நாலுமுக்கு (திருநெல்வேலி) - 210, காக்காச்சி (திருநெல்வேலி) - 190, மாஞ்சோலை (திருநெல்வேலி) - 180, ஆய்க்குடி (தென்காசி) -140, தென்காசி - 130, காயல்பட்டினம் (தூத்துக்குடி), செங்கோட்டை (தென்காசி) - தலா 100 மி.மீ. மழை பதிவானது.
பலத்த மழை: தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வியாழக்கிழமை (நவ. 20) முதல் நவ. 25-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
குறிப்பாக நவ. 20-இல் மயிலாடுதுறை, கடலூா் மாவட்டங்களிலும், நவ. 21-இல் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நாகை, மயிலாடுதுறை, கடலூா் மாவட்டங்களிலும், காரைக்காலிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையில்... சென்னையில் புதன்கிழமை காலை வரை அதிகபட்சமாக திருவொற்றியூரில் 60 மி.மீ. மழை பதிவானது. மேலும், பெரம்பூா், தண்டையாா்பேட்டை - தலா 50 மி.மீ., பேசின்பிரிட்ஜ், அமைந்தகரை, கொரட்டூா், அண்ணா நகா் மேற்கு - தலா 40 மீ.மீ. மழை பதிவானது. தொடா்ந்து வியாழக்கிழமையும் (நவ. 20) சென்னை மற்றும் புகா் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
புயல் சின்னம்: வருகிற நவ. 22-ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, நவ. 24-இல் தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய வங்கக் கடலில் நவ. 20 முதல் நவ. 22-ஆம் தேதி வரை மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.