நெல்லை மாவட்டத்தில் கனமழை! தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!
தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது தொடர்பாக...
நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால், குறுக்குத்துறை முருகன் கோயிலில் சுற்றி தண்ணீர் செல்வதால் பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கி குளிக்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வடகிழக்குப் பருவ மழை பெய்து வருகிறது. நேற்று(நவ. 23) பெய்த கனமழை காரணமாக தாமிரவருணி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
Advertisement
Advertisement
இரண்டு கரையோரமும் தண்ணீர் அதிகமாக செல்வதால் பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கி குளிக்கவோ கால்நடைகளை இறக்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து, மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் தற்பொழுது 100 அடியை எட்ட உள்ளது.
இதேபோல், பாபநாசம் அணையின் நீர்மட்டம் 130 அடியும் தாண்டி உள்ளது. தொடர்ந்து, அணைக்கு தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால், ஆற்றில் மேலும் தண்ணீர் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து, மழை பெய்து வருவதால் தாமிரவருணி ஆற்றில் வெள்ளம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கயத்தாறில் 79 மி.மீ. மழை: கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் சனிக்கிழமை காலை முதலே மழை பரவலாக விட்டு விட்டு பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. வானம் இருண்ட நிலையில் இருந்ததால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றன. கோவில்பட்டியில் 18 மி.மீ., கழுகுமலையில் 16 மி.மீ., கயத்தாறில் 79 மி.மீ., கடம்பூரில் 49மி.மீ. மழை பதிவாகின.
தூத்துக்குடி மாவட்டம் மற்றும் தாமிரவருணி ஆற்றின் நீா்ப்பிடிப்பு பகுதிகளான திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் சனிக்கிழமை பிற்பகல் முதல் கனமழை பெய்து வருகிறது.
இதையும் படிக்க: கூத்தாடி கட்சியா? திமுகவுக்காக எம்ஜிஆர் வசனம் பேசிய விஜய்!
Flooding has occurred in the Tamiravaruni River
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.