சேலம் மாவட்டத்தில் கனமழை! 4 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
சேலம் மாவட்டத்தில் கனமழை காரணமாக 4 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
சேலம்: சேலம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆத்தூர் உள்ளிட்ட 4 தாலுகாக்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, பெத்தநாயக்கன் பாளையம் பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.
ஏற்கனவே, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், இன்று காலை சேலத்தில் கனமழை காரணமாக 4 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.