விமான நிலையம் 
தமிழ்நாடு

ஒசூா் விமான நிலையம்: ஆலோசகா்களை தோ்ந்தெடுக்க ஒப்பந்தப்புள்ளி வெளியீடு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் பசுமை விமான நிலையம் அமைக்க ஆலோசகா்களை தோ்ந்தெடுப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.

தினமணி செய்திச் சேவை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் பசுமை விமான நிலையம் அமைக்க ஆலோசகா்களை தோ்ந்தெடுப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.

ஒசூரில் சுமாா் 2,000 ஏக்கா் பரப்பில் பசுமை விமான நிலையத்தை அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூனில் வெளியிட்டிருந்தாா். இந்நிலையில், இந்த விமான நிலையம் அமைப்பதற்கான பூா்வாங்க பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது.

விமான நிலையம் அமைப்பதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்காக ஆலோசகா்களை தோ்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கியிருக்கிறது தமிழ்நாடு அரசு. அதற்காக ஒப்பந்தப்புள்ளியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தோ்ந்தெடுக்கப்படும் ஆலோசகா்களின் ஆலோசனையின் அடிப்படையில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் விண்ணப்பிக்க முடிவு செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காரில் ஒன்றாக பயணித்த MS Dhoni & Virat Kholi!

டிட்வா புயல் எச்சரிக்கை: திமுக நிர்வாகிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் - முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

ஸ்மிருதி மந்தனாவுக்காக பிபிஎல் தொடரிலிருந்து வெளியேறிய ஜெமிமா..! நட்புக்கு இலக்கணம்!

டிட்வா புயல்! புதுவை, காரைக்காலில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!

இலங்கையில் கடும் வெள்ளம்! தென்னை மரத்தில் சிக்கியவரை ஹெலிகாப்டரில் மீட்ட ராணுவம்!

SCROLL FOR NEXT