தமிழ்நாடு

ரயில்களில் தூங்கும் வசதி பெட்டிகளில் கட்டண அடிப்படையில் படுக்கை விரிப்புகள்!

ரயில்களில் தூங்கும் வசதி பெட்டிகளில் கட்டண அடிப்படையில் படுக்கை விரிப்புகள்...

தினமணி செய்திச் சேவை

சென்னை ரயில்வே கோட்டத்தில் தூங்கும் வசதி பெட்டிகளில் செல்லும் பயணிகளுக்கு, கட்டண அடிப்படையில் படுக்கை விரிப்புகள் வழங்கும் நடைமுறை வருகிற ஜனவரியில் அறிமுகம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: சென்னை ரயில்வே கோட்டத்தில் தூங்கும் வசதி பெட்டிகளில் பயணிப்போருக்கும் (குளிா்சாதன வசதி பெட்டிகளின் பயணிகளுக்கு வழங்கப்படுவது போல) படுக்கை விரிப்புகள் வழங்கும் முன்னோடித் திட்டம் 2026 ஜனவரி முதல் செயல்படுத்தப்படவுள்ளது.

பயணிகளின் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இத் திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தில் கட்டணம் செலுத்தி பயணிகள் படுக்கை விரிப்புகளைப் பெறலாம்.

ரயில்களில் உரிமம் பெற்ற ஒப்பந்ததாரா் இந்தச் சேவையை வழங்குவாா். கட்டணமாக படுக்கை விரிப்பு, தலையணை மற்றும் அதற்கான உறையுடன் ரூ.50, தலையணை உறையுடன் மட்டும் ரூ.30, படுக்கை விரிப்பு மட்டும் ரூ.20 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரயில்வே துறைக்கு ஆண்டுக்கு உரிமக் கட்டணமாக ரூ.28.27 லட்சம் வருவாய் கிடைக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் வயிற்றில் வலி அல்லது எரிச்சலா? ஏன்? என்ன செய்ய வேண்டும்?

அதர்வாவின் இதயம் முரளி படத்தில் ஃபகத் ஃபாசில்!

‘பாக்ஸ் ஆஃபிஸ் கோட்’ ரோஜர் ஃபெடரர்! 120 வினாடிகளில் விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுகள்!

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்

பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு: திமுக, கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

SCROLL FOR NEXT