தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுத்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மயிலாடுதுறை, அரியலுர், சிவகங்கை, தூத்துக்குடி உள்பட 5 ஐந்து மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
கடலூர், பெரம்பலுர், திருச்சி, மதுரை விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவ. 29ல் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் நாளை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அதோடு, நாளை சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வேலூர், திருபத்தூர் உள்பட 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.