முகப்பு
தமிழ்நாடு

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த டிட்வா புயல்!

சென்னையில் இருந்து 230 கி.மீ. தொலைவில் டிட்வா புயல் உள்ளது.

Updated On : 30 நவம்பர், 2025 at 2:49 AM
டிட்வா புயல் பயணம்
பகிர்:

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

சென்னையை நோக்கி நகர்ந்து தெற்கு ஆந்திர கடற்கரை வழியாகச் செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வறண்ட காற்று உருவாகி புயல் வலுவிழந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

''வறண்ட காற்று மற்றும் ஈரக்காற்று முறிவு காரணமாக டிட்வா புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தற்போது வலுவிழந்துள்ளது. மயிலாடுதுறையில் 140-220 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. சிவகங்கை, ராமநாதபுரம் உள்பட டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூரிலும் மழை பெய்யும்.

அடுத்த 24 மணிநேரத்துக்கு மேகக்கூட்டங்கள் ஏதுமின்றி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே இருக்கும். எனினும், இன்று மாலை புதிய மேகக் கூட்டங்கள் உருவாகி வேலூர், ராணிப்பேட்டை உள்பட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு மழை பெய்யும். இன்று மாலை சென்னைக்கு மிக அருகில் புயல் வர வாய்ப்புள்ளது'' எனப் பதிவிட்டுள்ளார்.

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய வட இலங்கை கடற்பகுதிகளில் பகுதிகளில் உருவான டிட்வா புயல், வடக்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து இன்று வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகே உள்ள தென்மேற்கு வங்கக் கடலில் உள்ளது.

சென்னையில் இருந்து 230 கி.மீ. தொலைவிலும், நாகையில் இருந்து 60 கி.மீ. தொலைவில் டிட்வா புயல் உள்ளது.

இதையும் படிக்க | வலுவிழந்த டிட்வா புயல்: பாம்பன் பாலத்தில் மீண்டும் ரயில் இயக்கம்!

summary

Cyclone Ditwah gone missing weakened Depression

முழு கட்டுரையைப் படிக்க →