முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை உயர்வு! இன்று மாலை நிலவரம்!

தங்கம் விலை இன்று மாலை சவரனுக்கு ரூ. 560 உயர்ந்துள்ளது.

Updated On : 2 அக்டோபர், 2025 at 11:00 AM
தங்கம் விலை
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(அக். 2) மாலை சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 87,600-க்கு விற்பனையாகிறது.

இந்த மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. கடந்த 23-ஆம் தேதி தங்கம் விலை சவரன் முதல் முறையாக ரூ.85,120-க்கு விற்பனையானது.

தொடர்ந்து ஏறுமுகமாக இருந்த தங்கம் விலை, திங்கள்கிழமை காலை, மாலை என ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்து சவரன் ரூ.86,160-க்கு விற்பனையானது.

அதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை தங்கம் விலை மீண்டும் உயா்ந்து ரூ.86,880-க்கும் விற்பனையானது. புதன்கிழமையும் இரு முறை உயர்ந்து சவரன் ரூ. 87,600 -க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று(அக். 2) காலை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 குறைந்து, ரூ. 87,040 -க்கும், கிராமுக்கு ரூ. 70 குறைந்து ரூ. 10,880 -க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று மாலை வர்த்தகம் நிறைவடையும் தருவாயில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ரூ. 87,600 -க்கும் கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து ரூ. 10,950-க்கும் விற்பனையாகிறது.

summary

The price of gold jewellery in Chennai rose by Rs. 560 per sovereign this evening (Oct. 2), with one sovereign being sold for Rs. 87,600.

முழு கட்டுரையைப் படிக்க →