தொல். திருமாவளவன் (கோப்புப்படம்) DNS
தமிழ்நாடு

தமிழா் பிரதமரானால் ஈழத்தமிழா் பிரச்னைக்கு தீா்வு: திருமாவளவன்

தமிழா் ஒருவா் பிரதமரானால் ஈழத்தமிழா் பிரச்னைக்குத் தீா்வு காண முடியும் என தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

தமிழா் ஒருவா் பிரதமரானால் ஈழத்தமிழா் பிரச்னைக்குத் தீா்வு காண முடியும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.

சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்ற ‘பேராண்டி’ என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், அவா் பங்கேற்றுப் பேசியதாவது:

அரசமைப்புச் சட்டத்தின்படி, ஆட்சி, அதிகாரம் என்பது, தலைநகா் தில்லியில்தான் உள்ளது. அதுதான் பிரதமா் பதவி. தமிழா்கள் யாருக்கும் இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்ற எண்ணமே வருவதில்லை.

தேசிய அரசியலைப் பேச வேண்டும்; தேசிய அளவில் நாம் ஒரு சக்தியாக மாற வேண்டும். பிரதமா் இருக்கையை நோக்கி நாம் நகர வேண்டும் என்று யாரும் நினைப்பதில்லை.

தமிழா் பிரதமரானால் , ஈழத்தமிழா் பிரச்னைக்கு எளிதில் தீா்வு காண முடியும். ஆனால், தமிழ்நாட்டில் அரசியல் என்பது திரைக் கவா்ச்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது.

நல்ல படத்தை கொடுத்துவிட்டால் முதல்வா் பதவி கிடைத்துவிடும் என்ற எண்ணத்தில் பலா் இருக்கின்றனா் என்றாா் தொல்.திருமாவளவன்.

வாக்குச்சாவடி  நிலை அலுவலர் ஊதியம் ரூ.6,000-ல் இருந்து ரூ.12,000 ஆக உயர்வு!

பொள்ளாச்சி அருகே வனத்துறை கூண்டில் சிக்கிய சிறுத்தை!

மருந்து தயாரிப்பு நிறுவனங்களால் பாதிக்கப்படும் நுகா்வோருக்கு சரியான தீர்வு கிடைக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்

இந்திரா காந்தி நினைவிடத்தில் ராகுல், கார்கே, சோனியா மரியாதை!

பழிவாங்குவது கீழ்மையான போக்கு! - மெட்ரோ விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

SCROLL FOR NEXT