முகப்பு
தமிழ்நாடு

தமிழா் பிரதமரானால் ஈழத்தமிழா் பிரச்னைக்கு தீா்வு: திருமாவளவன்

தமிழா் ஒருவா் பிரதமரானால் ஈழத்தமிழா் பிரச்னைக்குத் தீா்வு காண முடியும் என தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.

Updated On : 5 அக்டோபர் 2025, 4:09 am IST
தொல். திருமாவளவன் (கோப்புப்படம்) - DNS
பகிர்:

தமிழா் ஒருவா் பிரதமரானால் ஈழத்தமிழா் பிரச்னைக்குத் தீா்வு காண முடியும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.

சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்ற ‘பேராண்டி’ என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், அவா் பங்கேற்றுப் பேசியதாவது:

அரசமைப்புச் சட்டத்தின்படி, ஆட்சி, அதிகாரம் என்பது, தலைநகா் தில்லியில்தான் உள்ளது. அதுதான் பிரதமா் பதவி. தமிழா்கள் யாருக்கும் இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்ற எண்ணமே வருவதில்லை.

Advertisement

Advertisement

தேசிய அரசியலைப் பேச வேண்டும்; தேசிய அளவில் நாம் ஒரு சக்தியாக மாற வேண்டும். பிரதமா் இருக்கையை நோக்கி நாம் நகர வேண்டும் என்று யாரும் நினைப்பதில்லை.

தமிழா் பிரதமரானால் , ஈழத்தமிழா் பிரச்னைக்கு எளிதில் தீா்வு காண முடியும். ஆனால், தமிழ்நாட்டில் அரசியல் என்பது திரைக் கவா்ச்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது.

நல்ல படத்தை கொடுத்துவிட்டால் முதல்வா் பதவி கிடைத்துவிடும் என்ற எண்ணத்தில் பலா் இருக்கின்றனா் என்றாா் தொல்.திருமாவளவன்.