முகப்பு
தமிழ்நாடு

சாதிப் பெயர்களை நீக்குவதில் அரசியல் செய்ய வேண்டாம்! - தங்கம் தென்னரசு

ஊர்கள், தெருக்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்குவது குறித்து தங்கம் தென்னரசு பேட்டி

Updated On : 11 அக்டோபர், 2025 at 8:38 AM
அமைச்சா் தங்கம் தென்னரசு
பகிர்:

பொது இடங்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்குவதில் எதிர்க்கட்சியினர் அரசியல் செய்தால் அது சமூகத்திற்கு செய்யும் துரோகம் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவுகளின்படி ஊர்கள், தெருக்கள், சாலைகளின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டங்களிலும் இதுகுறித்து பேசப்பட்டது.

இந்நிலையில் இதுதொடர்பான எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு,

'ஊர்கள், தெருக்கள், சாலைகளின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்கள் நீக்குவது குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளதை எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.

பழனிசாமி வேண்டுமென்றே இதனை திரித்துக் கூறுகிறார். சாதிப் பெயர்களை நீக்கும் விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள். அவ்வாறு அரசியல் செய்தால் அது சமூகத்திற்கு செய்யும் துரோகம்.

சாதிப் பெயர்களை நீக்க நீதிமன்ற அமைப்புகளும் சொல்லியிருக்கின்றன. வழிகாட்டு நெறிமுறைகளின்படி அனைத்து பகுதிகளிலும் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்படும். நாங்கள் இதை அரசியல் காரணங்களுக்காக இதைச் செய்யவில்லை" என்று கூறினார்.

summary

Minister Thangam Thennarasu says that the caste name will be removed in all public places

முழு கட்டுரையைப் படிக்க →