கோப்புப்படம் 
தமிழ்நாடு

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழை எச்சரிக்கை!

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு நாளை(அக். 27) ஆரஞ்ச் அலர்ட்.

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று(அக். 26) லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று(அக். 26) திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, வேலுர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை(அக். 27) சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

An orange warning has been issued for 4 districts, including Chennai, for very heavy rain tomorrow.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரைத் தொடா்ந்து நாடு முழுவதும் எஸ்ஐஆா் பணிகள்: நாளை அறிவிப்பு வெளியாகிறது?

புன்னகை... மானசா சௌத்ரி!

சதுப்பு நிலத்தில் கட்டுமானத்திற்கு அனுமதிக்கக் கூடாது: இபிஎஸ்

அதிக ரன்கள் குவித்து சாதனை; விராட் கோலிக்கு ஷிகர் தவான் புகழாரம்!

காஸாவில் எஞ்சிய பிணைக் கைதிகள் உடல்களைத் தேடும் பணி தீவிரம்!

SCROLL FOR NEXT