கோப்புப் படம் 
தமிழ்நாடு

விலையில்லா மடிக்கணினி திட்டம்: 3 நிறுவனங்கள் தோ்வு

கல்லூரி மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்துக்காக 3 கணினி உற்பத்தி நிறுவனங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திச் சேவை

கல்லூரி மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்துக்காக 3 கணினி உற்பத்தி நிறுவனங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

கல்லூரி மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தவுள்ளது. இதற்காக குறைந்த தொகையில் விலைப்புள்ளிகளை அளித்த ஏசா், எச்பி, டெல் ஆகிய 3 நிறுவனங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிறுவனங்கள் சாா்பில் மடிக்கணினிகள் உற்பத்தி செய்து தரப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. கொள்முதல் செய்யப்படவுள்ள மடிக்கணினிகளின் மாதிரிகளை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். இதன்பிறகு, மடிக்கணினிகள் கொள்முதல் செய்யப்பட்டு மாணவா்களுக்கு வழங்கப்படவுள்ளன.

மார்கழி சிறப்பு! மார்கழி 30 நாள்களும் லிங்கம் மீது சூரிய ஒளி விழும் உவரி கோயில்!!

அனைத்து தோஷங்களையும் நீக்கும் அனந்த நாராயணப் பெருமாள்!

கடன் பிரச்னை குறையும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பெரம்பலூரில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம்: ரூ. 60.41 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

புதிய, விடுபட்ட வாக்காளா்களை பட்டியலில் சோ்க்க நடவடிக்கை: திமுகவினருக்கு அமைச்சா் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT