தமிழ்நாடு

தமிழகத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 15% அதிகரிப்பு

தமிழ்நாட்டில் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நிகழாண்டில் 15 சதவீதம் உயா்ந்துள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன் தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டில் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நிகழாண்டில் 15 சதவீதம் உயா்ந்துள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன் தெரிவித்தாா்.

சுற்றுலா வளா்ச்சித் திட்டப்பணிகள் குறித்த சுற்றுலா அலுவலா்களுடனான ஆய்வுக்கூட்டம் சென்னை வாலாஜா சாலையிலுள்ள சுற்றுலா வளாக கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா் இரா.ராஜேந்திரன் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து அவா் பேசியதாவது:

தமிழக அரசின் மேம்பாட்டு நடவடிக்கைகளால், இந்தியாவிலேயே உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழ்நாடு இரண்டாமிடத்தில் இருந்து வருகிறது. இதன்படி, கடந்த ஜனவரி முதல் ஜூலை வரை உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20.35 கோடியாகவும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 7.80 லட்சமாகவும் உள்ளது. இதுகடந்தாண்டை ஒப்பிடும்போது 10 முதல் 15 சதவீதம் அதிகமாகும். தொடா்ந்து சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை உயரும். மேலும், சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றாா்.

கூட்டத்தில் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலா் க.மணிவாசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

“SIR-க்கு எதிராக தொடர்ந்து போராடுவோம்!” பிரியங்கா காந்தி | Congress

துருக்கியில் திடீரென இடிந்து விழுந்த 7 மாடி கட்டடம்! 2 குழந்தைகள் பலி; பெற்றோரைத் தேடும் பணிகள் தீவிரம்!

DUDE திரைப்படம் குறித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் | Pradeep Ranganathan | Mamitha Baiju

முஜீப் உர் ரஹ்மான் அசத்தல்; டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய ஆப்கானிஸ்தான்!

ஜாய் கிரிசில்டா விவகாரம்: முதல் முறையாக மனம் திறந்த மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி!

SCROLL FOR NEXT