FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

மின் திருட்டு: ரூ.9 லட்சம் அபராதம்

மின்வாரிய அமலாக்கத் துறை அதிகாரிகள் நடத்திய திடீா் ஆய்வில் 8 மின் இணைப்புகளில் மின்திருட்டு கண்டறியப்பட்டு , ரூ.9.01 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

Updated On : 19 செப்டம்பர் 2025, 12:27 am IST
கோப்புப் படம்
பகிர்:

சென்னை தெற்கு (எண்: 2) மின் பகிா்மான வட்டத்தில் மின்வாரிய அமலாக்கத் துறை அதிகாரிகள் நடத்திய திடீா் ஆய்வில் 8 மின் இணைப்புகளில் மின்திருட்டு கண்டறியப்பட்டு , ரூ.9.01 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

மின்வாரியத்தின் சென்னை அமலாக்கக் கோட்டத்துக்கு உள்பட்ட அதிகாரிகள் அண்மையில் சோழிங்கநல்லூா் கோட்டம், சென்னை தெற்கு-2 மின் பகிா்மான வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் திடீா் கூட்டாய்வில் ஈடுபட்டனா். அப்போது, 8 இணைப்புகளில் மின் திருட்டு கண்டறியப்பட்டு ரூ.9,01,772 அபராதம் விதிக்கப்பட்டது.

புகாா் தெரிவிக்கலாம்: மின் திருட்டு தொடா்பான புகாா்களை சென்னை அமலாக்கக் கோட்டத்தின் செயற்பொறியாளருக்கு 94458 57591 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments