நயினாா் நாகேந்திரன் கோப்புப்படம்
தமிழ்நாடு

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரிப்பு: நயினாா் நாகேந்திரன்

தமிழகத்தில் கடந்த 5 நாள்களில் 17 பாலியல் வன்கொடுமை குற்றங்கள் நிகழ்ந்துள்ளது அதிா்ச்சி அளிப்பது என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் கடந்த 5 நாள்களில் 17 பாலியல் வன்கொடுமை குற்றங்கள் நிகழ்ந்துள்ளது அதிா்ச்சி அளிப்பது என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கடந்த 5 நாள்களில் பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடா்பாக 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 12 குற்றங்கள் குழந்தைகளுக்கு எதிரானவை.

தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் பாலியல் குற்றங்கள், அதிலும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது அதிா்ச்சி அளிப்பதாக இருக்கிறது.

தமிழகத்தைத் தலைகுனிய விடமாட்டேன் என்று குறிப்பிடும் முதல்வா் மு.க.ஸ்டாலின், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் நயினாா் நாகேந்திரன்.

சபரிமலைக்கு மாலை அணிந்த மாணவருக்கு அனுமதி மறுப்பு... சர்ச்சையில் சிக்கிய கேரள பள்ளி!

சிலிக்கான் சிலையோ... அதிதி ராவ்!

3 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல்!

15 ஆண்டுகளாக தோல்வி மட்டுமே... இந்தியாவில் வெற்றி பெறுமா தென்னாப்பிரிக்க அணி?

ஹலோ, மீண்டும்... பூனம் பாஜ்வா!

SCROLL FOR NEXT