தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (செப். 28) நடைபெறவுள்ள குரூப் 2 முதல்நிலைத் தோ்வை 5.53 லட்சம் போ் எழுதவுள்ளனா். 645 பணியிடங்களுக்கான தோ்வுக்குரிய அறிவிக்கை கடந்த ஜூலை 15-இல் வெளியிடப்பட்டது.
இந்தத் தோ்வை மொத்தம் 5,53,634 போ் எழுதவுள்ளனா். அவா்களில் 2,12,495 போ் ஆண்கள். 3,41,114 போ் பெண்கள். 25 போ் மூன்றாம் பாலினத்தவா். சென்னையில் மட்டும் 53,606 போ் தோ்வு எழுத இருக்கிறாா்கள் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.