முகப்பு
தமிழ்நாடு

கலைமாமணி விருது: தமிழக அரசுக்கு நடிகர் மணிகண்டன் நன்றி

தனக்கு கலைமாமணி விருது அறிவித்த தமிழக அரசுக்கு நடிகர் மணிகண்டன் நன்றி தெரிவித்துள்ளார்.

Updated On : 26 செப்டம்பர், 2025 at 12:13 PM
நடிகர் மணிகண்டன்
பகிர்:

தனக்கு கலைமாமணி விருது அறிவித்த தமிழக அரசுக்கு நடிகர் மணிகண்டன் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறிதுது அவர் விடுத்துள்ள அறிக்கையில், சிறப்புமிக்க கலைமாமணி விருது எனக்கு வழங்கிய தமிழ்நாடு அரசாங்கத்திற்கு மற்றும் இயல் இசை நாடக மன்றத்துக்கு என் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என் வாழ்வில் இது ஒரு முக்கியமான நிகழ்வாகும்.

என்னை தொடர்ந்து ஆதரித்து வந்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் முக்கியமாக தமிழக மக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். இந்த கௌரவம் உங்களுக்கெல்லாம் சொந்தமானது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிவின் பாலியின் புதிய பட ரிலீஸ் தேதி!

தமிழ்நாடு அரசின் சார்பாக தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் மூலம் பல்வேறு கலைப் பிரிவுகளைச் சேர்ந்த சிறந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்கப்படுகிறது. அதன்படி 2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன.

அதில், நடிகர்கள் கே. மணிகண்டன், எஸ். ஜே. சூர்யா, விக்ரம் பிரபு உள்ளிட்டோர் விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.

summary

Actor Manikandan has thanked the Tamil Nadu government for announcing the Kalaimamani award for him.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.