தவெக தலைவர் விஜய்... 
தமிழ்நாடு

சிபிஐ விசாரணை கோரும் தவெக!

கரூா் துயர சம்பவத்துக்கு சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்...

தினமணி செய்திச் சேவை

கரூா் துயர சம்பவத்துக்கு சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி, தவெக சாா்பில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி தண்டபாணியிடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள உயா்நீதிமன்ற நீதிபதி தண்டபாணியின் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை தவெக தரப்பு வழக்குரைஞா் அறிவழகன் தலைமையிலான அக்கட்சியினா் சென்று இந்த முறையீட்டை தாக்கல் செய்தனா். இந்த முறையீடு, உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் திங்கள்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு விசாரிக்கப்படவுள்ளதாக தவெக இணைப் பொதுச் செயலா் சி.டி.நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

அந்த மனுவில், ‘சம்பவம் நடைபெற்ற இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைப் பாதுகாக்க வேண்டும். திட்டமிட்டு மின்சாரம் நிறுத்தப்பட்டது. காவல் துறையினா் தொண்டா்கள் மீது அத்துமீறி தடியடி நடத்தினா். இந்த சம்பவம் திட்டமிட்ட சதி’ எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட மைய நூலகத்தில் சிறுவா் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

மென் பொறியாளா் உயிரிழப்பு

தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிக்கு வின்ஸ் பள்ளி மாணவா் தோ்வு

பாகிஸ்தான் அமைச்சர் கையில் வெற்றிக் கோப்பையை வாங்க இந்தியா மறுப்பு! கையோடு எடுத்துச் சென்ற நிர்வாகம்!

கரூா் சம்பவம்: ஈரோட்டைச் சோ்ந்த கல்லூரி மாணவா் உள்பட 3 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT