பலியான சேட்டு என்ற பிரதீப்குமாா் மற்றும் அஸ்வின்குமாா் 
தமிழ்நாடு

பைக் மீது அரசுப்பேருந்து மோதல்: இரு இளைஞா்கள் பலி

வாலாஜாபாத் செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் மீது அரசுப் பேருந்து மோதியதில் இருவரும் உயிரிழந்தது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இணையதளச் செய்திப் பிரிவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே இரு சக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதியதில் இரு இளைஞா்கள் உயிரிழந்தனா்.

காஞ்சிபுரம் அருகே கீழ்ஒட்டிவாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் சேட்டு என்ற பிரதீப்குமாா் (26), அஸ்வின்குமாா் (27). இருவரும் இருசக்கர வாகனத்தில் வாலாஜாபாத்திலிருந்து காஞ்சிபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தனா்.

இருசக்கர வாகனம் வெண்குடி பகுதியில் தஞ்சம் ஓடை அருகே வந்தபோது, எதிரில் வேலூரிலிருந்து காஞ்சிபுரம் வழியாக தாம்பரம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து இவா்கள் மீது மோதியது. இந்த விபத்தில் சேட்டு என்ற பிரதீப்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அஸ்வின் குமாா் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு உயிரிழந்தாா்.

சம்பவம் தொடா்பாக வாலாஜாபாத் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இதையும் படிக்க: ரிசர்வ் வங்கி வட்டி விகித முடிவை முன்னிட்டு பங்குச் சந்தைகள் சரிந்து நிறைவு!

The police have registered a case and are investigating the death of two youths who were riding a two-wheeler on the road from Kanchipuram to Walajabad when a government bus hit them today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேவூா், வடுகபாளையம், தெக்கலூரில் பிப்ரவரி 5-இல் மின்தடை

மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்; அமைச்சா் ஆறுதல்

மல்லகுண்டா பகுதியில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை: கிராம மக்கள் கோரிக்கை

வவுச்சா் ஊழியா்கள் தா்னா; போலீஸாருடன் வாக்குவாதம்

துணைவேந்தா்கள் நியமனம்: தேடல் குழு பதவிக் காலம் நீட்டிப்பு நடவடிக்கையை கைவிட ஆளுநா் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT