பூக்கள் விலை  
தமிழ்நாடு

ஆயுத பூஜை: அனல் பறக்கும் பூக்கள் விலை!

ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகைகளை முன்னிட்டு சந்தைகளில் அனல் பறக்கிறது பூக்கள் விலை.

இணையதளச் செய்திப் பிரிவு

ஆயூத பூஜை, விஜய தசமியை ஓட்டி தஞ்சை பூச்சந்தையில் பூக்களின் விலை வழக்கத்தை விட நான்கு மடங்கு உயர்ந்து உள்ளது.

விழாக் காலம் என்பதால், விலை அதிகமாக இருந்தாலும், குறைவான அளவில் மக்கள் பூக்களை வாங்கிச் செல்கின்றனர்.

தமிழகம் முழுவதும் நாளையும் நாளை மறுநாளும் ஆயுத பூஜை மற்றும் விஜய தசமி பண்டிகைகள் கொண்டாடப்படவிருக்கிறது. இதனால், சந்தையில் பூக்கள் விலை அதிகரித்துள்ளது.

தஞ்சை பூச்சந்தைக்கு தேனி, திண்டுக்கல், உசிலம்பட்டி, கும்பகோணம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு வருகிறது. ஆயுத பூஜை, விஜயதசமி என தொடர்ந்து விழா காலமாக இருப்பதால் பூக்களின் தேவை முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை அடுத்து, பூக்களின் விலை வழக்கத்தை விட நான்கு மடங்கு உயர்ந்துள்ளது. மல்லிகை 800 ரூபாய், செவ்வந்தி 200 ரூபாய் அரளி 500 ரூபாய், ஆப்பிள் ரோஸ் 150 ரூபாய், பன்னீர் ரோஸ் 150 என விற்கப்படுகிறது.

அத்தியாவசியமாக பூக்கள் இருப்பதால், விலை ஏற்றத்தை கருத்தில் கொண்டு குறைவான அளவில் பூக்களை வாங்கிச் செல்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அக். 3 பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படுமா?

கரூர் செல்லாதது ஏன்? விடியோ வெளியிட்டார் தவெக தலைவர் விஜய்

திருவண்ணாமலை பாலியல் வன்கொடுமை: முதல்வர் என்ன பதில் வைத்துள்ளார்?

“கரூர் பலி: திட்டமிடப்பட்டதா?” அமைச்சர் Anbil Mahesh பதில்! | Karur | TVK | VIJAY | DMK

பாஜக கூட்டணியில் இணைவதற்கு பதில் ராஜிநாமா செய்துவிடுவேன்: ஒமர் அப்துல்லா!

SCROLL FOR NEXT