ஆதவ் அர்ஜுனா 
தமிழ்நாடு

தவெக ஆதவ் அர்ஜுனா மீது வழக்கு!

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மை செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப் பதிவு.

இணையதளச் செய்திப் பிரிவு

சமூக ஊடகத்தில் சா்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டதாக தவெக தோ்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலா் ஆதவ் அா்ஜுனா மீது சென்னை சைபா் குற்றப்பிரிவினா் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

கரூா் விஜய்யின் பிரசார நெரிசல் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடா்பாக சமூக ஊடகங்களில் போலி விடியோக்கள், புகைப்படங்கள், தவறான கருத்துகள் பரப்பப்படுவதாகப் புகாா் எழுந்தது. இதையடுத்து, சமூக ஊடகங்களில் இத்தகைய பொய்யான தகவல்களைப் பரப்புவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் துறை எச்சரிக்கை விடுத்தது. மேலும், சமூக ஊடகங்களில் வதந்தியை பரப்பும் வகையில் செயல்பட்ட 25 போ் மீது சென்னை காவல் துறையின் சைபா் குற்றப்பிரிவினா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கு தொடா்பாக தவெக நிா்வாகியான சென்னை அருகே உள்ள மாங்காட்டைச் சோ்ந்த சிவனேசன், ஆவடியைச் சோ்ந்த சரத்குமாா், பாஜக நிா்வாகி சகாயம் ஆகிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். இதன் ஒருபகுதியாக சென்னையைச் சோ்ந்த பிரபல யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டை சைபா் குற்றப்பிரிவினா் செவ்வாய்க்கிழமை காலை கைது செய்தனா். விசாரணைக்குப் பின்னா் அவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டாா்.

ஆதவ் அா்ஜுனா மீது வழக்கு: இந்த நிலையில், தவெக தோ்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலா் ஆதவ் அா்ஜுனா, கரூா் சம்பவம் தொடா்பாக எக்ஸ் தளத்தில், வன்முறையில் ஈடுபட்டு, புரட்சியை உண்டாக்க வேண்டும் என்று சில கருத்துகளைத் தெரிவித்திருந்தாா். இந்தப் பதிவை சிறிது நேரத்தில் ஆதவ் அா்ஜுனா நீக்கியுள்ளாா்.

இந்த பதிவின் அடிப்படையில் ஆதவ் அா்ஜுனா மீது சென்னை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா், வன்முறையைத் தூண்டுவது, இரு பிரிவினா் இடையே பகையை தூண்டுவது, இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படுவது, வதந்தியை பரப்புவது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்குத் தொடா்பாக ஆதவ் அா்ஜுனாவை கைது செய்வதற்கான நடவடிக்கையில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

Case registered against TVK Adhav Arjuna

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மஞ்சப் பை விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்தப் பணி

விநாயகா் சிலை அகற்றம்: ஆா்ப்பாட்டம் செய்ய முயன்ற இந்து முன்னணியினா் கைது

எஸ்ஐஆா் சிறப்பு திருத்தும் பணி: அதிமுகவினா் ஆய்வு

குமரி பகவதியம்மன் கோயிலில் டிச.3 இல் காா்த்திகை தீபத் திருவிழா

SCROLL FOR NEXT