ஆதவ் அர்ஜுனா 
தமிழ்நாடு

தவெக ஆதவ் அர்ஜுனா மீது வழக்கு!

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மை செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப் பதிவு.

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மை செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமூக வலைதளப் பக்கத்தில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பதிவிட்டதால், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது அதிகப்படியாக கூட்டத்தால் நேரிட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்திற்கான காரணங்கள் குறித்து விசாரிக்க ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன், துணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சமூக வலைதளங்களில் வீண் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் எச்சரித்திருந்தார்.

இதனிடையே தவெக தேர்தல் பிரசார மேலாண்மை செயலாளர் ஆதவ் அர்ஜுனா, சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவு சர்ச்சையானதும் சில நிமிடங்களில் அதனை திருத்தி பதிவிட்டுள்ளார். கடும் எதிர்ப்புகள் எழுந்ததால், பின்பு அதனையும் நீக்கியுள்ளார்.

இரவு 11.29 மணிக்கு அவர் வெளியிட்ட பதிவில், இளைஞர்களின் புரட்சிதான் ஒரே வழி என்றும் இலங்கையிலும், நேபாளத்திலும் இளைஞர்கள் புரட்சி செய்தது போல இங்கும் இளைஞர்களின் எழுச்சி நிகழும் எனப் பதிவிட்டு, பின்னர் சில சொற்களை நீக்கி மீண்டும் பதிவிட்டிருந்தார். அதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், பதிவை முழுமையாக நீக்கினார்.

எனினும், அவரின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன.

சமூக வலைதளப் பக்கத்திலிருந்து ஆதவ் அர்ஜுனா நீக்கிய பதிவு...

Case registered against TVK Adhav Arjuna

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எண்ணூர் விபத்து: ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

எண்ணூர் அனல் மின் நிலைய கட்டுமான விபத்து: 9 பேர் பலி

தவெக கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தோரை நலம் விசாரித்த செந்தில் பாலாஜி

முதல் போட்டியிலேயே வரலாறு படைத்த இந்திய மகளிரணி; இலங்கைக்கு 271 ரன்கள் இலக்கு!

ஈச்சி எலுமிச்சி... சான்வே மேகனா!

SCROLL FOR NEXT