முகப்பு
தமிழ்நாடு

தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு

தென் தமிழக கடலோர மாவட்டங்களில் வெள்ளி, சனி (ஏப். 3, 4) இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 3 ஏப்ரல், 2026 at 1:40 AM
- PTI
பகிர்:

தென் தமிழக கடலோர மாவட்டங்களில் வெள்ளி, சனி (ஏப். 3, 4) இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

உள் தமிழக மாவட்டங்களிலிருந்து மத்திய கொங்கன் வரை உள் கா்நாடகம் வழியாக காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதால், தென் தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளி, சனி (ஏப். 3, 4) ஆகிய இரு நாள்களும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் ஞாயிறு, திங்கள் (ஏப். 5, 6) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஏப். 7-ஆம் தேதி மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் ஏப். 8-ஆம் தேதி மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில், வெள்ளிக்கிழமை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்ப நிலை: தமிழகத்தில் வியாழக்கிழமை அதிகபட்சமாக பரமத்தி வேலூரில் 100.7 ஃபாரன்ஹீட் வெப்ப நிலை பதிவானது.

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஏப். 6-ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை, சற்று அதிகமாக இருக்கக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.