மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி வேட்புமனு தாக்கல்!
மதுரை மத்திய தொகுதியில் இயக்குநர் சுந்தர். சி வேட்புமனு தாக்கல் செய்தது பற்றி..
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதிய நீதிக் கட்சி சார்பில் மதுரை மத்திய தொகுதியில் நடிகரும் இயக்குநருமான சுந்தர். சி இன்று வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் வருகிற ஏப். 23 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
234 தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுவைத் தாக்கல் செய்ய இன்றோடு மூன்று நாள்கள் உள்ள நிலையில், பலரும் வேட்புமனுவைத் தாக்கல் செய்து வருகின்றனர்.
Advertisement
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள மதுரை மத்திய தொகுதிக்கு திரைப்பட தயாரிப்பாளர் இயக்குனர் நடிகர் சுந்தர். சி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
இந்தி நிலையில், மதுரை மத்திய தொகுதியில் தே.ஜ. கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சி வேட்பாளர் நடிகர் சுந்தர். சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் மனைவி குஷ்புவுடன் இணைந்து மதுரை மத்திய தொகுதியில் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.