சங்கிகளைப்போல வாட்ஸ்ஆப் வதந்திகளை வாந்தியெடுக்கும் பழனிசாமி: மு.க. ஸ்டாலின் கடும் தாக்கு
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அடுத்தடுத்து பொய்களைக் கூறி வருவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் தாக்கு
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அடுத்தடுத்து பொய்களைக் கூறி வருவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
விருதுநகரில் பிரசாரக் கூட்டத்தில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் பேசுகையில், தேமுதிகவின் இளைஞரணி செயலாளராகத் துடிப்புடன் செயல்பட்டுவரும் விஜயபிரபாகரனுக்கு, முரசு சின்னத்தில் நீங்கள் வாக்களிக்க வேண்டும்.
அவருடைய தந்தையும், என்னுடைய ஆருயிர் நண்பருமான கேப்டன் விஜயகாந்த், மக்கள் ஆணையிட்டால் என்ற படத்தில் வேட்பாளராக நடித்தார். அப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நானும் வருவேன். வேட்பாளரான விஜயகாந்தை ஆதரித்து நான் பாட்டு பாடியிருப்பேன்.
Advertisement
அன்று இவருடைய அப்பாவுக்கு வாக்கு சேகரித்து, திரைப்படத்தில் நடித்தேன். இன்று, இவருக்கு முதல்வராக நேரடியாக வாக்கு கேட்க வந்திருக்கிறேன்.
எதிர்க்கட்சியினர் சாதனைகள் எதனையும் சொல்ல முடியாமல், அவதூறுகளையும் தரம்தாழ்ந்த பேச்சுகளையும் நம்பி பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
பழனிசாமி என்றால், அது பொய்; பித்தன் என்றுதான் வரும். அவர் சொல்லியிருக்கிற பொய்களைக் கொண்டு ஒரு புத்தகமே வெளியிடலாம்.
ஐந்து முறை முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதியை பற்றி, பச்சைப் பொய் பேசிய பழனிசாமிக்கு நெல்லையில் நான் பதிலடி கொடுத்துள்ளேன். தான் சொன்ன ஒரு பொய்யிலிருந்து தப்பிக்க அடுத்தடுத்த பொய்களை, கூச்சமேயில்லாமல் கூறத் தொடங்கியிருக்கிறார்.
பெருந்தலைவர் காமராஜர், ஜானகி எம்ஜிஆருக்கு நாம் இடம்தர மறுத்ததாகக் கூறினார்.
சங்கிக் கூட்டத்தில் சேர்ந்ததாலேயே, அவர்களைப்போலவே வாட்ஸ்ஆப் வதந்திகளை வாந்தி எடுக்கிறார் பழனிசாமி.