தேர்தல்: புதுவையில் கல்லூரிகளுக்கு 3 நாள்கள் விடுமுறை!
புதுவையில் கல்லூரிகளுக்கு 3 நாள்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது பற்றி...
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி புதுவையில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிப்பு
புதுவையில் நாளை மறுநாள்(ஏப். 9, வியாழக்கிழமை) சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி புதுவையில் தேர்தல் பிரசாரம் இன்றுடை நிறைவு பெறுகிறது.
இந்நிலையில் தேர்தலையொட்டி புதுவையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு ஏப். 6 முதல் 10 ஆம் தேதி வரை ஏற்கெனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இந்நிலையில் புதுவையில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கும் நாளை(ஏப். 8) முதல் ஏப். 10 ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகள் பலவும் வாக்குச்சாவடிகளாக இருப்பதால் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல கேரளம், அஸ்ஸாம் மாநிலத்திற்கும் ஏப். 9 தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.