ஹரி நாடார், ராக்கெட் ராஜா வேட்பு மனுக்கள் நிராகரிப்பு!
ஆலங்குளம் தொகுதியில் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு பற்றி...
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதியில் பனங்காட்டுப் படை கட்சித் தலைவர் 'ராக்கெட் ராஜா' ஆறுமுக பாண்டியன் மற்றும் ஹரி நாடார் ஆகியோரது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி வேட்புமனு தாக்கல் நேற்று முடிந்த நிலையில் இன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதியில் பனங்காட்டுப் படை கட்சித் தலைவர் ராக்கெட் ராஜாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுவில் முன்மொழிந்தவரின் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட விவரங்கள் போலியாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
அதேபோல சத்திரிய சான்றோர் படை கட்சித் தலைவர் ஹரி நாடாரும் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஹரி நாடார் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ள நிலையில் சிறையில் இருந்தே வேட்புமனு தாக்கல் செய்ததால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஆலங்குளம் தொகுதியில் திமுக சார்பில் மனோஜ் பாண்டியன், அதிமுக சார்பில் கேஆர்பி பிரபாகரன் தவெக சார்பில் போட்டியிடுகின்றனர்.
கடந்த 2021 தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்ட ஹரி நாடார் 37 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று 3-ம் இடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.