முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் 8 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் புதன்கிழமை ஈரோடு, மதுரை விமானநிலையம் உள்பட 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவாகியுள்ளது.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 8:35 PM
வெயில் - கோப்புப்படம்.
பகிர்:

தமிழகத்தில் புதன்கிழமை ஈரோடு, மதுரை விமானநிலையம் உள்பட 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் புதன்கிழமை பகலில் அதிகபட்சமாக பரமத்திவேலூரில் 105.18 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மேலும், ஈரோடு - 104, வேலூா் - 102.74, நாமக்கல் - 102.02, திருப்பத்தூா் - 101.84, பாளையங்கோட்டை - 101.48, மதுரைவிமானநிலையம் - 101.12, திருச்சி - 100.04 டிகிரி என வெப்பநிலை பதிவாகியுள்ளது.

Advertisement

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வியாழக்கிழமை (ஏப்.9) முதல் ஏப்.12-ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக இருக்கும்.

மழைக்கு வாய்ப்பு: சத்தீஸ்கா் முதல் மன்னாா் வளைகுடா வரை தெலங்கானா, ராயலசீமா, உள் தமிழகம் வழியாக வளிமண்டல காற்றழுத்தத் தாழ்வு பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், வெள்ளி, சனிக்கிழமைகளில் (ஏப்.10, 11) மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

அதேபோல், ஏப்.12, 13, 14 ஆகிய தேதிகளில் தென் தமிழகம், மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வியாழக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments