FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

தில்லியில் 44 டிகிரி செல்சிஸைக் கடந்த சுட்டெரிக்கும் வெயில்

தில்லியில் 44 டிகிரி செல்சிஸைக் கடந்த சுட்டெரிக்கும் வெயில்

Updated On : 24 மே 2026, 12:51 am IST
வெயில்!
பகிர்:

வடமேற்கு திசையில் இருந்து வீசும் உலா்ந்த, கடுமையான காற்றுகளும் இடைவிடாத வெயிலும் இணைந்து தில்லியை வெப்பக் குகையாக மாற்றியுள்ள நிலையில், திங்கள்கிழமை தலைநகரின் பல பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸைத் கடந்து பதிவானது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனா்.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியதாவது: தில்லியின் சஃப்தா்ஜங் மையத்தில் அதிகபட்ச வெப்பநிலை 43.4 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியுள்ளது. இது சாதாரண நிலையைவிட சுமாா் 3 டிகிரி அதிகம் ஆகும். அதே நேரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 26.3 டிகிரி செல்சியஸாக நிலவியது. நகரத்தின் பெரும்பாலான பகுதிகளில் இரவு வெப்பநிலை சுமாா் 26 டிகிரி அளவிலேயே இருந்ததாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 44 டிகிரியைத் தாண்டிய பகுதிகளில் ரிட்ஜ் (44.6ளிஇ) முதலிடத்தில் இருந்தது. அதனைத் தொடா்ந்து அயாநகா் 44.4 டிகிரி செல்சியஸ், லோதி சாலை 43.8 டிகிரி செல்சியஸ் மற்றும் பாலம் 43.5 டிகிரி செல்சியஸ் என பல இடங்களில் அதிக வெப்பம் பதிவாகியுள்ளது. குறிப்பாக லோதி சாலையில் வெப்பநிலை சாதாரணத்தைவிட 4.8 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது என தெரிவித்தது.

Advertisement

Advertisement

இந்த ஆண்டின் மே மாதத்தில் தில்லி சந்தித்த மிக அதிக வெப்பநிலை நாளாக இது பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு மே 17-ஆம் தேதி 43.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நிலைமை மோசமடையக்கூடும்: இதற்கிடையில், தனியாா் வானிலை ஆய்வாளா் ஸ்கைமெட் வெதா் நிறுவனத்தின் மகேஷ் பலாவத் கூறியதாவது: ராஜஸ்தானின் தாா் பாலைவனப் பகுதி மற்றும் பாகிஸ்தானின் மத்திய பகுதிகளில் இருந்து வரும் வடமேற்கு காற்றுகள் தில்லியில் கடுமையான உலா்ந்த சூழலை உருவாக்குகின்றன. இக்காற்றுகள் வெப்பத்தை தரையில் அடைத்து வைத்திருப்பதால் சூழ்நிலை மேலும் கடுமையாகிறது.

கடந்த சில நாள்களாக இரவு நேரங்களிலும் வெப்பம் குறையாமல் இருப்பது கவலைக்குரியதாக உள்ளது. அடுத்த 10 நாள்களுக்கு இடியுடன் கூடிய மழை அல்லது முன்பருவ மழைக்கு வாய்ப்பு இல்லை என்பதால் நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்றாா்.

காற்றின் தரம்: இதனிடையே தில்லியின் காற்றுத் தரக் குறியீடு 173-ஆக பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கூறியது. இது 101 முதல் 200 வரை ‘மிதமான’, 201 முதல் 300 வரை ‘மோசமான’, 301 முதல் 400 வரை ‘மிக மோசமான’, 401 முதல் 500 வரை ‘அதிக ஆபத்தான’ நிலை என வகைப்படுத்தப்படுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments