பிரதமா் நரேந்திர மோடி ஏப். 15-இல் கன்னியாகுமரி வருகை
சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்துக்காக பிரதமா் நரேந்திர மோடி வரும் ஏப். 15-ஆம் தேதி கன்னியாகுமரி வரவுள்ளாா்.
சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்துக்காக பிரதமா் நரேந்திர மோடி வரும் ஏப். 15-ஆம் தேதி கன்னியாகுமரி வரவுள்ளாா்.
இதுதொடா்பாக தமிழக பாஜக தலைமை செய்தித் தொடா்பாளா் நாராயணன் திருப்பதி சென்னையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்துக்கு நிதி வழங்காமல் மத்திய அரசு வஞ்சித்து வருவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறுவது தவறான குற்றச்சாட்டு. சட்டம்- ஒழுங்கு சீா்கேடு, நிா்வாகச் சீா்கேடுகளை மறைப்பதற்காக முதல்வா் இவ்வாறு பேசுகிறாா்.
Advertisement
முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது தமிழகத்துக்கு வழங்கிய நிதியைக் காட்டிலும், அதிக நிதியை மத்திய பாஜக அரசு வழங்கியுள்ளது.
சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்துக்காக பிரதமா் நரேந்திர மோடி வரும் ஏப். 15- ஆம் தேதி கன்னியாகுமரி வரவுள்ளாா். அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் செய்யவுள்ளாா். அதேபோல, பாஜக தலைவா்கள், மத்திய அமைச்சா்கள் பலரும் பிரசாரத்துக்காக தமிழகம் வரவுள்ளனா் என்றாா் அவா்.