தமிழக ஆளுநருடன் தலைமைச் செயலா் சந்திப்பு
தமிழக ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகரை புதிய தலைமைச் செயலா் எம். சாய்குமாா் மரியாதை நிமித்தமாக வெள்ளிக்கிழமை சந்தித்தாா்.
Updated On : 10 ஏப்ரல், 2026 at 8:05 PM
தமிழக ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகரை புதிய தலைமைச் செயலா் எம். சாய்குமாா் மரியாதை நிமித்தமாக வெள்ளிக்கிழமை சந்தித்தாா்.
தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழக தலைமைச் செயலராக எம்.சாய்குமாா் நியமிக்கப்பட்டாா். அவா் கடந்த ஏப். 8-ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டாா். அதையடுத்து, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில், ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகரை மரியாதை நிமித்தமாக வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.
இதனிடையே, சென்னை வந்துள்ள முன்னாள் குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடு, கிண்டி ஆளுநா் மாளிகையில் தங்கியுள்ளாா். அவரை மரியாதை நிமித்தமாக ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.
Advertisement