தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசினாரா ஸ்டாலின்? மீஞ்சூர் சம்பவத்திற்கு இபிஎஸ் கண்டனம்!
மீஞ்சூரில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது பற்றி எடப்பாடி பழனிசாமி பதிவு...
தமிழ்நாட்டில் இதுவரை பிரசாரம் செய்த முதல்வர் மு.க. ஸ்டாலின், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ளதைப் பற்றி ஒரு வார்த்தையாவது பேசினாரா? என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை மீஞ்சூரில் மசூதி தெருவில் செமஸ்டர் தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்த மாணவியை நேற்று இரவு மர்ம நபர்கள் 3 பேர் வீடு புகுந்து அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த மாணவி பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கஞ்சா போதையில் வந்த கும்பல், மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடி காவல் கூடுதல் ஆணையர் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த சம்பவம் பற்றி இபிஎஸ் தனது எக்ஸ் பக்கத்தில்,
"திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியைக் குறிவைத்து கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, பாதிக்கப்பட்ட மாணவி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியதில் மாணவி உயிருக்கு போராடி வருவதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
இந்த கொடூரக் குற்றத்தில் ஈடுபட்ட அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகளை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
கஞ்சா போதை, பாலியல் வன்கொடுமை, கொலை முயற்சி, இதுதான் திமுக ஆட்சிக்காலம்!
படிக்கும் கனவுகளோடு இருந்த மாணவியை, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராட வைத்திருப்பதுதான் ஸ்டாலின் மாடல். இந்த மாடல் தான் மீண்டும் வர வேண்டும் என்று ஸ்டாலின் துடித்துக்கொண்டு இருக்கிறார்.
நான் ஒன்றே ஒன்று கேட்கிறேன்- இத்தனை நாள்கள் தேர்தல் பிரசாரம் செய்த ஸ்டாலின், தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ளதைப் பற்றி ஒரு வார்த்தை, ஒரே ஒரு வார்த்தை பேசினாரா?
தன் ஆட்சிக்கான பொறுப்பு இல்லாத, என்ன நடக்கிறது என்று ஐடியா-வே இல்லாத ஒரு முதல்வர் தமிழ்நாட்டை ஆண்டது போதும்.
ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான கேள்வி ஒன்றே ஒன்று தான்- தமிழகம் வாழ வேண்டுமா? ஆம் என்றால், திமுக வீழ்ந்தே ஆக வேண்டும்!" என்று பதிவிட்டுள்ளார்.