'மீண்டும் திமுக ஆட்சி' வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம்!
சென்னை வில்லிவாக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் தீவிர பிரசாரம்...
சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
தமிழகத்தில் ஏப். 23 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தேர்தல் பிரசாரம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை வில்லிவாக்கம் பகுதியில் சாலைவலம் மேற்கொண்டு திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனுக்கு ஆதரவாக மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
Advertisement
அப்போது மக்கள் மத்தியில் பேசிய அவர் திமுகவின் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், தற்போதைய தேர்தல் வாக்குறுதிகளை பட்டியலிட்டுப் பேசினார்.
"தேர்தல் வாக்குறுதிகள் ஏறக்குறைய 90% நிறைவேற்றியுள்ளோம். மீதமுள்ள வாக்குறுதிகள் மத்திய அரசு உரிய அனுமதி வழங்காததால் தடைபட்டுள்ளது.
வரும் தேர்தலில் திமுக தொடர்ந்து 2 ஆம் முறையாக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும். இப்போது 2-ம் முறையாக ஆட்சியமைக்க முடியாது என்று கூறுவதை உடைத்து ஆட்சி அமைப்போம்.
நான் தொடர்ந்து 2-ம் முறையாக முதல்வராக பொறுப்பேற்க திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களியுங்கள்" என்று கூறினார்.