வாக்களிக்க வெள்ளை சட்டை, காக்கி பேண்டில் வந்த அண்ணாமலை!
கோவையில் அண்ணாமலை வாக்களித்தது பற்றி...
கோவை கவுண்டம்பாளையத்தில் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வாக்களித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகின்றது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் தங்களின் வாக்குகளை மக்களுடன் வரிசையில் நின்று செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள வாக்குச் சாவடியில் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று வாக்களித்தார்.
Advertisement
தவெக தொண்டர்களும், விஜய்யின் ஆதரவாளர்களும் வாக்குப் பதிவு நாளான இன்று பின்பற்றும் வெள்ளை - பழுப்பு / காக்கி நிற உடையில் அண்ணாமலையும் வந்திருந்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை தெரிவித்ததாவது:
”நான் காவல்துறையில் இருந்ததால் காக்கி நிற பேண்ட் போடுகிறேன். அரசியலுக்கு வந்த பிறகு வெள்ளை சட்டை அணிகிறேன்.
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியும், விஜய்யும் இந்த நிற உடையைதான் பின்பற்றுகிறார்கள்.
காவல்துறையில் இருந்து வெளியே வந்த பிறகு, எப்போது காக்கி என்னுடன் இருக்க வேண்டும் என்ற காரணத்தால் 10-ல் 9 நாள்கள் காக்கி பேண்ட்தான் போட்டு வருகிறேன்.
இதற்கும் வேறெந்த குறியீட்டுக்கும் சம்பந்தமும் இல்லை. நான் எப்போது ஒரே பக்கம்தான் இருக்கிறேன். அது நியாயமான பக்கம்தான். எனது ஜனநாயகக் கடமையை சரியாக செய்துள்ளேன்” என்றார்.