முகப்பு
தமிழ்நாடு

இயக்கத்தில் இணைந்துள்ள அனைவருக்கும் மனமார்ந்த நன்றி: அண்ணாமலை

இயக்கத்தில் இணைந்துள்ள ஒவ்வொருவருக்கும் மனமார்ந்த நன்றி என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Updated On : 6 ஜூன் 2026, 7:20 pm IST
அண்ணாமலை - கோப்புப் படம்
பகிர்:

இயக்கத்தில் இணைந்துள்ள ஒவ்வொருவருக்கும் மனமார்ந்த நன்றி என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், கடந்த 24 மணி நேரத்தில் 13 லட்சம் உறுப்பினர்கள் இணைந்து, http://wetheleader.org இயக்கத்திற்கு நீங்கள் அளித்துள்ள பேராதரவு, பெரும் நெகிழ்ச்சியையும், அதைவிட பெரிய பொறுப்பையும் எனக்கு அளித்திருக்கிறது.

இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்துள்ள ஒவ்வொருவருக்கும், எனது மனமார்ந்த நன்றிகள். இது ஒரு தனி மனிதனின் பயணம் அல்ல; நல்ல மாற்றத்தை விரும்பும் நமது மக்களின் கூட்டுப் பயணம். மாற்றம் வேண்டும் என்று நம்பும் ஒவ்வொரு குடிமகனின் குரலும், நீங்கள் வழங்கியிருக்கும் பேராதரவில் எதிரொலிக்கிறது.

Advertisement

Advertisement

உங்கள் நம்பிக்கையை மதித்து, நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் இந்தப் பயணத்தை முன்னெடுப்போம். தமிழகத்தின் சிறந்த எதிர்காலத்திற்கான இந்தப் பயணத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

summary

Annamalai has expressed his heartfelt thanks to everyone who has joined the movement.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.