வாக்காளர்களுக்கு பேருந்து பற்றாக்குறை, தங்கக் காசு விநியோகம்... அண்ணாமலை குற்றச்சாட்டு!
கவுண்டம்பாளையம் வாக்குச்சாவடியில் அண்ணாமலை இன்று வாக்களித்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மாநில பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கவுண்டம்பாளையம் வாக்குச்சாவடியில் இன்று வாக்களித்தார்.
வாக்களித்த பிறகு செய்தியாளர்களுடன் அண்ணாமலை பேசியதாவது:
மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். ஜனநாயகக் கடமைக்காக வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும்.
Advertisement
Advertisement
மக்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்க பேருந்துகள் போதிய எண்ணிக்கையில் இயக்கப்படவில்லை. அனைவரையும் வாக்களிப்பதற்கான வழிவகைகளை தேர்தல் ஆணையமும் அரசும் எடுக்க வேண்டும்.
தேர்தல் ஆணையம் தனது பணிகளை சிறப்பாக செய்திருக்க வேண்டும். கரூரில் தங்கக் காசுகள் விநியோகிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் பணம் விநியோகிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.
Tn Election 2026 Annamalai cast vote Allegation on election comission
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.