முகப்பு
செய்திகள்

வாக்காளர்களுக்கு பேருந்து பற்றாக்குறை, தங்கக் காசு விநியோகம்... அண்ணாமலை குற்றச்சாட்டு!

கவுண்டம்பாளையம் வாக்குச்சாவடியில் அண்ணாமலை இன்று வாக்களித்தார்.

Updated On : 23 ஏப்ரல், 2026 at 10:07 AM
அண்ணாமலை - எக்ஸ்
பகிர்:

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மாநில பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கவுண்டம்பாளையம் வாக்குச்சாவடியில் இன்று வாக்களித்தார்.

வாக்களித்த பிறகு செய்தியாளர்களுடன் அண்ணாமலை பேசியதாவது:

மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். ஜனநாயகக் கடமைக்காக வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும்.

Advertisement

மக்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்க பேருந்துகள் போதிய எண்ணிக்கையில் இயக்கப்படவில்லை. அனைவரையும் வாக்களிப்பதற்கான வழிவகைகளை தேர்தல் ஆணையமும் அரசும் எடுக்க வேண்டும்.

தேர்தல் ஆணையம் தனது பணிகளை சிறப்பாக செய்திருக்க வேண்டும். கரூரில் தங்கக் காசுகள் விநியோகிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் பணம் விநியோகிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.

summary

Tn Election 2026 Annamalai cast vote Allegation on election comission

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.