போதை தடுப்புக் குழு! அண்ணாமலையின் முதல் மாநாட்டில் 6 தீர்மானங்கள்!
அண்ணாமலையில் வீ தி லீடர்ஸ் அமைப்பின் முதல் மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது குறித்து...
அண்ணாமலையின் 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் முதல் மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
பொள்ளாச்சி ஆச்சிபட்டியில் போதையில்லா தமிழகம் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் இளைஞர்கள், பெண்கள் உள்பட பலர் பங்கேற்று போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராக உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
போதையில்லா தமிழகம் பிறக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மாநாட்டில் 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
போதைப்பொருள் ஒழிப்பில் தேசிய முன்னோடி மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டும்.
மாவட்டந்தோறும் போதைப் பொருள் தடுப்புக் குழுவை உருவாக்க வேண்டும்.
கல்வி நிலையங்கள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்.
வேலைக்குச் செல்லும் பணியாளர்கள் காலையிலேயே மது அருந்துவதை தடுக்க, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனையைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
Pollachi We The Leaders K Annamalai Six resolutions passed at first conference
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.