வாக்குப்பதிவில் புதிய வரலாறு! தமிழக வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் 'சல்யூட்'!
தமிழகத்தில் வாக்குப்பதிவில் புதிய வரலாறு படைத்ததாக வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் பாராட்டு
தமிழகத்தில் வாக்குப்பதிவில் புதிய வரலாறு படைத்ததாக வாக்காளர்களுக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இதுவரையில் இல்லாதவகையில் அதிகளவில் வாக்குப்பதிவு நடைபெற்று புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணிக்கு நிறைவுறுகையில் 84.69 சதவிதம் என்ற அளவில் முடிவடைந்து, சாதனை படைத்தது. இருப்பினும், வாக்கு சதவிகிதம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் நாளைதான் வெளியிடும்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தமிழகத்தில் அதிக வாக்கு சதவிகிதத்துக்கு பாராட்டு தெரிவித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், "சுதந்திரத்துக்கு பிறகு, இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் அதிக வாக்குப்பதிவு சதவிகிதம் பதிவாகியுள்ளது.
தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தின் ஒவ்வொரு வாக்காளருக்கும் தேர்தல் ஆணையத்தின் சல்யூட்" என்று கூறியுள்ளார்.